தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மாளிகை அருகே ஓடும் புது ஆற்றங்கரை ஓரம் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக் மீட்கப்பட்டவர்  தஞ்சை வண்டிக்கார தெருவை சேர்ந்த மணவாளன் என்பது தெரியவந்தது. இவர் கோயம்புத்தூரில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த மணவாளன் படித்துறையில் அமர்ந்து குடித்தார். பின்னர் போதை தலைக்கேறியதால் எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.