விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கில் தமிழ்நாடு போலீஸ் என்ற பக்கம் போலீஸ் முத்திரையுடன் இருப்பதை பார்த்தனர். அந்த முகநூல் பக்கத்தில் 46 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் ஆய்வு செய்த போது அந்த பக்கத்தில் தவறான தகவல்களை பதிவிடுவது தெரியவந்தது.

மேலும் அரசியல் தலைவர்களை விமர்சித்து தகவல்கள் பதிவிடுவதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முகநூல் பக்கத்தை திருத்தங்கல்லை சேர்ந்த தமிழ்செல்வன்(29) என்பவர் தொடங்கியது தெரியவந்தது. பட்டதாரியான அவர் திருத்தங்கல்லில் கட்டிட ஒப்பந்ததாரராக இருக்கிறார். அவரை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.