திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி எஸ்.வளவு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் வெங்கடேசனுக்கு ராமாயி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராமாயி நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமாயியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.