கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் சாலை கே.சி.சி நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ராஜ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த 24-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.