ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அக்ராவரம் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரியும். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஒரு குரங்கு கோவில் அருகே இறந்து கிடந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் மனிதர்களுக்கு இறுதி சடங்கு செய்வது போல இறந்த குரங்கிற்கு அனைத்து சடங்குகளையும் செய்தனர்.

பின்னர் குரங்கை மஞ்சள் நீர் ஊற்றி குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் இட்டு மேள, தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து குரங்கை ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர். குரங்கு என நினைக்காமல் மனிதனாக பாவித்து கிராம மக்கள் செய்த காரியம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.