சென்னை மாவட்டத்தில் உள்ள சந்தோஷபுரம் பகுதியில் ஜெயந்தி(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அடுத்த மாதம் ஜெயந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வழக்கம் போல அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜெயந்தியின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அவரது சகோதரரும் கல்லூரிக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயந்தி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ஜெயந்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயந்தி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்