கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபுதூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியும் காதலித்து வந்தனர். இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி காதலை வளர்த்தனர். இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் நடத்த முடிவை செய்தனர். அதன்படி கடந்த பத்தாம் தேதி இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் பெரியோர் முன்னிலையில் நிச்சயம் செய்யப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற அன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு சென்று சான்றிதழ்களை வாங்கி வருவதாக தெரிவித்தார். ஆனால் கல்லூரிக்கு செல்லாமல் இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாயமான இளம் பெண்ணை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.