கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏராளமான ஆண்களும், பெண்களும் கல்லூரி முடிந்து வந்த மாணவ, மாணவிகளும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டனர். அதாவது அந்த வாலிபர் இளம்பெண்ணை தனது கையில் தூக்கி கொண்டு சிரித்தபடியும், கொஞ்சிய படியும் நடந்து சென்றுள்ளார். அதனை ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் முதலில் சினிமா ஷூட்டிங் நடப்பதாக நினைத்தனர். அதன் பிறகு தான் அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் ஷூட்டிங் நடத்தியது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்ததில் இளம் பெண்ணும், வாலிபரும் காதலித்து திருமணம் செய்தது தெரியவந்தது. லைக்குகளுக்கு ஆசைப்பட்டு இருவரும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரிலீஸ் நடத்தி முகம் சுளிக்க வைத்துள்ளனர்.