விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி மேல்மலையனூர் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற பிரியதர்ஷினி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பிரியதர்ஷினியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இது குறித்து பிரியதர்ஷினியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தொரபடியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான தமிழரசன் என்பவர் பிரியதர்ஷினி கடத்தி சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.