வேலூர் மாவட்டத்திலுள்ள வேலப்பாடியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனது மகனுக்கு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் 15 லட்சம் ரூபாய் பணம் கேட்டார். அந்த பணத்தை கடன் வாங்கி கொடுத்தேன். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி தரவில்லை.

இந்நிலையில் கடன் தொல்லையால் நாங்கள் அவதிப்படுவதை தெரிந்து கொண்ட ஒருவர் சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து 15 லட்ச ரூபாய் பணத்தை வாங்கி தருகிறேன் என கூறினார். அவ்வபோது அவர் என்னிடமிருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டார். அந்த பணத்தையும் அவர் தரவில்லை. மொத்தமாக அவர்கள் என்னிடமிருந்து 20 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.