கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த மாதம் இளம்பெண்ணுக்கும் பக்கத்து ஊரில் வசிக்கும் வாலிபருக்கும் திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இளம்பெண் தனக்கு நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் கோச்சிங் சென்டருக்கு சென்றார்.

அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து வாலிபரின் பெற்றோர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.