சேலம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டியில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்ன பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுலோச்சனா(31) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுலோச்சனாவும் அவரது தாயும் மருத்துவமனை செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் டவுன் பேருந்தில் ஏற முயன்றனர்.

அப்போது சின்ன பொண்ணு பேருந்தில் ஏறாததை பார்த்து சுலோச்சனா பேருந்தில் இருந்து கீழே இறங்கும் போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் சுலோசனா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.