நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிக்கூர் ஊராட்சி அண்ணா நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் கணினிகளை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிக்கன் பிரியாணி, முட்டை, இனிப்பு என அறுசுவை உணவு வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஏழை எளிய மக்கள் கல்வி பயிலும் அரசு பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக குந்தா ஒன்றிய துணைச் செயலாளர் போர்த்தி ஜெகதீஷ் செய்திருந்தார்.