பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் விமல் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விமல் ராஜாவுக்கும் கோகிலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கோகிலாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் இரு வீட்டார்களும் பேசி விமல் ராஜாவையும் கோவிலாவையும் பிரித்து வைத்திருந்தனர். தற்போது விமல் ராஜா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றதற்கும் இரண்டாவது திருமணம் செய்ததற்கும் அவரது அக்காள் கணவர் தனபால் தான் காரணம் என கோகிலா சந்தேகப்பட்டார். சம்பவம் நடைபெற்ற அன்று கோகிலா தனபாலின் வீட்டிற்கு சென்று அவரது மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோகிலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.