சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் புதுநகர் மூன்றாவது தெருவில் எம்.பி.ஏ பட்டதாரியான அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் அசோகுக்கும் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் செய்வது தடைபட்டதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த அசோக் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசோக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.