தேனி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முத்துப்பாண்டி குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின் தடை ஏற்பட்டது. அந்த சமயம் அவர் எந்திரத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து திடீரென மின்சாரம் வந்ததால் எந்திரம் இயங்க தொடங்கி பெல்ட்டில் அவரது கை சிக்கியது.

இதனால் வலது கை துண்டாகி படுகாயமடைந்த முத்துபாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் குவாரி உரிமையாளர் ஆதிமூலம் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.