திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி வடக்கு மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நகராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.