திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பழைய பேட்டை பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கி ராஜா(28) மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப் மற்றும் வாட்டர் சர்வீஸ் வைத்துள்ளார். நேற்று மாலை இசக்கி ராஜா மோட்டார் சைக்கிளில் வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இசக்கி ராஜாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக இசக்கி ராஜா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.