சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் பகுதியில் தீனதயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீனதயாளன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் கோயம்பேடு 100 அடி சாலையில் இருக்கும் புதிய மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மொபட் தடுப்பு சுவரில் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தீனதயாளன் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீனதயாளனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.