சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கும் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மெரினா பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மெரினா நேதாஜி சிலை அருகே ஒருவர் ஒரு பாக்கெட் கஞ்சா 50 ரூபாய் என கூவி விற்று கொண்டிருந்தார்.

இதனை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தேபாந்த் ராவத் என்பது தெரியவந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராவத்தை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.