கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹைகிரவுண்ட் பகுதியில் பீர்முகமது(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பீர்முகமது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கன்னியாகுமரி- கோவளம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் பீர்முகமது நாய் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பீர்முகமதுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பீர்முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.