ஆந்திரா மாநிலத்திலிருந்து ஆம்னி பேருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொண்டக்கார பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் நட்டு பாய் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து குஜராத்தை சேர்ந்த பெண் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.