திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் காமராஜர் நகர் விரைவில் இளந்தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளந்தீபன் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் சுப்ரமணியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சாலையின் குறிக்க மாடு வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்தை வலது பக்கம் திருப்பினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து முன்னால் சென்ற சதீஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதனால் பேருந்து சக்கரத்தில் சிக்கி இளந்தீபன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சதீஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.