தமிழகத்தில் இரவு முதல் பல மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டம் வெள்ளத்தால் தத்தளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. வலங்கைமான் தாலுகாவில் வீடுகளுக்குள் மழை வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அரசு தாய் சேய் மருத்துவமனையிலும் வெள்ள நீர் புகுந்ததால் கர்ப்பிணிகள் மாவட்டம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னொரு சென்னையாக மாறிவிடுமோ என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.