வங்கக்கடலின் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அவ்வகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனிடையே கடலூர் மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கடந்த நான்காம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் மழை காரணமாக விளையாட்டு அரங்கம் முழுவதிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் உடற்தகுதி தேர்வு கடலூர் வெள்ளி கடற்கரை பகுதிக்கு மாற்றப்பட்டது.

கடற்கரை சாலை முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கொட்டும் மழையிலும் உடற்தகுதி தேர்வுக்கான ஓட்டப்பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.