தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிமுத்துவுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குடிப்பழக்கம் காரணமாக மாரிமுத்துவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சோகத்தில் மாரிமுத்து மதுபோதையில் சுற்றித்திரிந்தார். இந்நிலையில் வல்லம் பகுதியில் இருக்கும் குளத்தில் மாரிமுத்து மது குடித்துள்ளார்.

அதன் பிறகு போதையில் கால் தவறி குளத்தில் விழுந்துவிட்டார். இதனை பார்த்த சிலர் மாரிமுத்துவை மீட்க முயற்சி செய்தனர்m ஆனால் அவரை மீட்க இயலவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 10 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மாரிமுத்துவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.