மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளராக ராமமூர்த்தி என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று மதுரை ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலக தனி பிரிவுக்கு ராமமூர்த்தி பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் புதிய ஆணையாளராக செந்தில் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சென்னை ஊரக வளர்ச்சி துறை தலைமை இடத்தில் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் பதவி ஏற்றுக்கொண்ட புதிய ஆணையாளருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.