திருச்சி மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சாலையில் இருக்கும் இடத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்துக் கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.