கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி ரேஷன் கடையில் கருணாநிதி என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற கருணாநிதி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என வந்தது. இதுகுறித்து பூதப்பாண்டியன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.