பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் நூற்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா(65) என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் விஜயா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் விஜயாவின் கழுத்தில் அணிந்து இருந்த ஏழு பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து விஜயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.