நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியைச் சேர்ந்த 18 வயது மாணவி துடியலூர் பன்னி மடையில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் அந்த மாணவி புங்கம்பாளையத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்ற வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று ஒரு வாலிபர் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னையும் உனது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

சமீப காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.