சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கணவரை இழந்த மேனகா வாடகை வீட்டில் தனது மகன், மகள் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவரது மகள் கீர்த்தனா(17) தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கீர்த்தனா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கீர்த்தனா எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் “நான் இந்த முடிவை எடுக்க காரணம் என்னோட பொருளாதார பிரிவு மேடம். அவங்க இன்னைக்கு என்னை எல்லார் முன்னிலையிலும் ரொம்ப” என்று மட்டும் எழுதி உள்ளார்.

இதற்கிடையே கீர்த்தனாவின் பெற்றோரும், உறவினர்களும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க சம்மதிப்போம்; இல்லை என்றால் உடலை வாங்க மாட்டோம் என கூறியுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு கீர்த்தனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.