சேலம் மாவட்டத்தில் உள்ள கீச்சிப்பாளையம் பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு நவீன் குமார் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் நவீன் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சேலம் நீதிமன்றம் நவீன்குமாருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.