கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் மதுரை சேர்ந்த டேவிட் என்பவர் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டேவிட் உறவினரான 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்ததும் டேவிட் மருதமலை கோவிலில் வைத்து மாலை மாற்றி அவரை திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் டேவிட் திருமண ஆசை வார்த்தைகள் கூறி தங்களது மகளை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் டேவிட் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.