தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் ராஜ், கோகுல்ராஜ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் கோகுல்ராஜ் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பிரவீன் ராஜ், கோகுல்ராஜ், அதே பகுதியில் வசிக்கும் குமார், பிரசாந்த் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த குமாரும் பிரசாந்த்தும் அண்ணன் தம்பி இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் குமார், பிரசாந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.