மராட்டிய மாநிலத்தில் இருந்து மக்காச்சோள பாரம் ஏற்றி கொண்டு லாரி முசிறி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை மணி என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் வடிவேல் என்பவர் மாற்று டிரைவராக உடன் வந்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற வேறொரு லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மணி, வடிவேல் ஆகிய இருவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.