கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அவரது தந்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணை யாரோ பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 28-ஆம் தேதி அந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார்.

இதனையடுத்து 30-ஆம் தேதி வீட்டிற்கு வந்த பெண்ணிடம் அவர்கள் தந்தை எங்கே சென்றாய் என திட்டினார். அதற்கு தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வடக்ககி பாளையத்தில் வசிக்கும் ஆனந்தகுமார் என்பவர் தனது மனைவியும் குழந்தைகளும் சாப்பிட்டு தூங்கிப் பிறகு பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலில் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் ஆனந்த குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.