தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. அண்மையில் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா பல மாதம் சிகிச்சைக்கு பின் தற்போது தான் படங்களில் சுறுசுறுப்பாக நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் அவருடைய நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகியது. இந்த நிலையில் சமந்தாவிற்கு சந்தீப் என்ற ரசிகர் ஆந்திர மாநிலத்தில் கோயில் கட்டி இருக்கிறார்.

இது தொடர்பாக  சந்தீப் கூறியதாவது, சமந்தா பிரத்யூஷா அறக்கட்டளை வாயிலாக பல்வேறு சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதன் காரணமாக சமந்தாவுக்கு கோவில் கட்ட முடிவெடுத்தேன். இதற்கு எங்களது வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோவில் கட்டி வருகிறேன். இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.