ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் குமார்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். நேற்று அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை குமார் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பெயரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் குமாரை கைது செய்தனர்.