திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஜோதி நகரில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சா(45) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அம்சா அதே பகுதியில் வசிக்கும் 6 பேருடன் கடலூர் வழியாக திருநள்ளாருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நேற்று மஞ்சகுப்பம் மணிக்கூண்டு அருகே சென்றபோது டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்த கார் தாறுமாறாக ஓடி உயர் அளித்த மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

மேலும் மோதிய வேகத்தில் மின்கம்பம் உடைந்து அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அம்சாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது பற்றி அறிந்த மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பத்தை நட்டு மின் இணைப்பு கொடுத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.