ரூ 6500 மட்டும் முதலீடு செய்து 1.5 வருடத்தில் 2 கோடி வருமானம் ஈட்டிய இளம்பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இன்றைய இளைஞர்கள் பலரும் சுய தொழில் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதில் சொற்பமானவர்களே வெற்றி காண்கிறார்கள். மற்றவர்களுக்கு அவர்களது ஆசை என்பது வெறும் ஆசையாக மட்டுமே உள்ளது. அந்த வகையில் இளம் பெண் ஒருவர் தான் விருப்பப்பட்ட தொழில் ஒன்றில் வெற்றி கண்டதை பெருமையுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

தொழில் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் வெறும் 6500 முதலீடு செய்து இன்று ஆன்லைன் மூலம் மட்டுமே 1.5 வருடத்தில் இரண்டு கோடி ரூபாய் லாபம் ஈட்டி  என்னுடைய முதல் நிறுவனத்தை உருவாக்கினேன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ? ஆரம்பத்தில் பண பற்றாக்குறை போதுமான அளவு வர்த்தக மின்மை ஆகியவை காரணமாக பெரிய அளவில் உற்பத்தியில் ஈடுபடவில்லை. மாறாக, நான் எனது பொன்னான நேரம், முயற்சியை  கைவிடாத மனப்பான்மை, எதையும் எதிர்கொள்ளக்கூடிய நிலைத்தன்மை ஆகியவற்றை மட்டுமே முதலீடாக கொண்டு  செயல்பட்டு வெற்றியும் கண்டுள்ளேன்.

 தொழிலில் பல்வேறு சவால்களை சந்தித்ததால் எனது குடும்பத்தினரும் இதை கைவிடுமாறு பலமுறை என்னிடம் அறிவுறுத்தினர். இறுதியாக என்  கடினமான உழைப்புக்கு பலனாக  சில லாபங்களை கிடைக்க, கிடைத்த லாபத்தை மீண்டும் முதலீடு செய்து இன்று எனது கனவான பெங்களூரில் முதல் கடையை திறந்துள்ளேன்.  தொழிலில் எப்படியாவது வெற்றியை அடைந்தே தீர வேண்டும் என்ற தீராத நிலை தன்மை தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார். தற்போது இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

 

View this post on Instagram

 

A post shared by Shobana G (@shobana_nithinn)