திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொத்தியம்பாக்கம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய வெள்ளவேடு போலீசார் இரண்டு மகன்களை கைது செய்தனர். இதற்கிடையே சீனிவாசன் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அமுதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமுதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.