நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் 2012 ஆண்டு இறந்த நிலையில் அவரது தாய் பவுலின் இருதய மேரி மகனின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நாகை நீதிமன்றம் மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உள்ளது என தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தான் சொத்தில் பங்கு உள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.