அரியலூர் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக புதிய பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்கை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திறந்து வைத்துள்ளார்.

இந்த திறப்பு விழாவின் போது மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்கள், ஆர்டிஓ, தாசில்தார், கூட்டுறவு சரக பதிவாளர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர், நகர செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.