கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பழனிசாமி முருகேசன் ஆகிய இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தோகைமலை செல்லும் நெடுஞ்சாலையில் குப்பாசிப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த பழனிசாமி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த முருகேசன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.