கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகலக்கோட்டை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாதன் சாவ் என்பவர் தனது மனைவி பூனம் தேவியுடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தேவி தனது கணவரிடம் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என கூறினார். அதற்கு மாதன் பத்து நாட்கள் கழித்து செல்லலாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த பூனம் தேவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூனம் தேவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.