கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து தனியார் பேருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சுண்டகிரி என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து டிரைவர், 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.