ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை மணிமலை பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை 3 மணிக்கு கவின் காருக்கு கியாஸ் நிரப்புவதற்காக சென்னிமலையில் இருக்கும் கியாஸ் பங்குக்கு சென்று கொண்டிருந்தார். அவர் அம்மாபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது காருக்கு அடியில் இருந்து புகை வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கவின் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.