நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சி கிழக்கு தெருவில் லாரி டிரைவரான வீரப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் செல்வகுமார் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இது தொடர்பாக செல்வகுமாருக்கும் அவரது தாய் சாரதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்து செல்வகுமார் மோட்டார் சைக்கிளில் பாலப்பட்டி வழியாக செல்லும் சேலம்-கரூர் ரயில் பாதைக்கு சென்றார். பின்னர் அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து செல்வகுமார் உடல் சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.