சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கம்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நேற்று உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஏலகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாளையம்புதூர் கூட்ரோடு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மொபட் மீது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த பழனியம்மாள் மீது கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதால் அவர் கணவர், பிள்ளைகள் கண்முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக பிரபுவும், குழந்தைகளும் காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனியம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.